இறுதிச் சொற்பொழிவு என்ற தலைப்பில் பல பேராசிரியர்கள் சொற்பொழிவுகளை நிகழ்த்தி உள்ளனர். தாங்கள் இறந்து போவதற்கு முன்பு கடைசி முறையாக மாணவர்களிடம் ஓர் உரை நிகழ்த்த ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டால், எதைப் பற்றிப் பேச அவர்கள் விரும்புவார்கள் என்று கற்பனை செய்து, அதைப் பற்றி பேசுமாறு அவர்களிடம் கேட்டுக் கொள்ளப்படும். இதுதான் கடைசி வாய்ப்பு என்று அறிந்திருந்தால், உலகிற்கு நாம் எப்படிபட்ட ஞானத்தை விட்டுச் செல்ல விரும்புவோம்? நாளையே நாம் இருக்குமிடத்தில் புள் முளைக்கப் போகிறது என்றால், நமது பெயரைச் சொல்லும்படியாக எதை விட்டுவிட்டு செல்ல நாம் ஆசைப்படுவோம்? இதுபோன்ற இறுதிச் சொற்பொழிவு ஒன்றை வழங்குமாறு கார்னகி மெலன் பல்கலைகழக கணினிப் பேராசிரியர் ரேண்டி பாஸ்க்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, அது தனது கடைசிச் சொற்பொழிவு என்று கற்பனை செய்ய வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை. ஏனெனில், குணப்படுத்த முடியாத புற்றுநோய் அவருக்கு இருந்தது அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் கொடுத்த அந்த சொற்பொழிவு மரணத்தைப் பற்றி இருக்கவில்லை. குழந்தைப் பருவ கனவுகளை உண்மையிலேயே அடைவதைப் பற்றியும், வாழ்வின் ஒவ்வொரு கனத்தையும் எவ்வாறு குதூகலமாகக் கழிப்பது என்பதைப் பற்றியும் மட்டுமே அந்த உரை அமைந்திருந்தது. அதுதான் இப்புத்தகம்.
The Last Lecture (இறுதிச் சொற்பொழிவு)
Author: Randy Pausch (ரேன்டி பாஷ்)
Price:
₹
250.00
Condition: New
Isbn: 9788183223584
Publisher: Manjul Publication
Binding: Paperback
Language: Tamil
Genre: Novels & Short Stories,Letters & Essay,
Publishing Date / Year: 2013
No of Pages: 250
Weight: 270 Gram
Total Price: ₹ 250.00
Reviews
There are no reviews yet.