₹288.00
MRPGenre
Print Length
192 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2016
ISBN
9789352440177
Weight
180 gram
ஒரு நூற்றாண்டை எட்டும் தருணத்தில் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்ட அயோத்திதாசரின் சிந்தனைகள்மீது ஆய்வுவெளிச்சம் பாய்ச்சும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது.
நவீனகால தமிழ்ச் சிந்தனைகள்மீதும் செயல்பாடுகள்மீதும் மரபின் வேரிலிருந்து எழுந்துவந்து வினையாற்றிய அரிய மூலிகைச்செடியையொத்த அயோத்திதாசர் எனும் சிந்தனையாளரின் தனித்துவமான அவதானங்களை உரையாடல்களின்வழியே கண்டடைகிறது இத்தொகுப்பு. நவீன மனப்பாங்கால் கண்டறிய முடியாத கோணங்களை அவற்றின் மறைவிலிருந்து விலக்கி, விரிந்த பின்புலத்தில் வைத்துப் பேசிய அயோத்திதாசரை அவர் காலத்திலிருந்தும் சமகாலத்திலிருந்தும் மதிப்பிடுகிறது இத்தொகுப்பின் கட்டுரைகள்.
அயோத்திதாசரின் சிந்தனைகளப் புரிந்துகொள்ள முயற்சிப்பதோடு அவை உருவானவிதம், அவர் ஒன்றை புரிந்துகொண்ட - விளக்கியமுறை, அவற்றின் சமகாலப் பொருத்தம் ஆகியவற்றையும் இக்கட்டுரைகளில் முன்வைக்கிறார் ஸ்டாலின். இதுவரை அயோத்திதாசர் சார்ந்து கவனம்பெறாத பதிவுகளிலிருந்தும் முதன்முறையாக தரவுகளைத் திரட்டி எழுதப்பட்டிருப்பதும் இத்தொகுப்பின் தனித்துவம்.
0
out of 5