₹276.00
MRPGenre
Print Length
184 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2025
ISBN
9789361104831
Weight
180 gram
புராண, இதிகாசக் கதைகளை நவீன கதை வடிவத்திற்குள் கையாள்வது புதிதல்ல. அந்தக் கதைகளின் மீதும் பாத்திரங்களின் மீதும் நவீன பார்வையைச் செலுத்தும் கதைகள் தமிழில் கணிசமாக உள்ளன. புராண, இதிகாசக் கதாபாத்திரங்களை நவீன வாழ்வின் கட்டமைப்பிற்குள் வைத்துப் பார்க்கும் அணுகுமுறையை இக்கதைகள் கொண்டிருக்கின்றன. ஊர்மிளை, அம்பை, யசோதை போன்ற பெண் கதாபாத்திரங்கள் நவீன சட்டகத்திற்குள் புதிய பிறவி எடுக்கிறார்கள். செவ்வியல் இலக்கியங்களில் புழங்கிவரும் பெண்கள் முற்றிலும் மாறுபட்ட முறையில் இக்கதைகளில் வெளிப்படுகிறார்கள். தங்களைப் பற்றிப் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் பார்வைகளில் அழுத்தமான சலனங்களை ஏற்படுத்துகிறார்கள்.
தகவல் தொழில்நுட்ப உலகம் சார்ந்த கதைகளை அதிகம் எழுதியிருக்கும் லாவண்யா சுந்தரராஜன் இந்தக் கதைகளில் முற்றிலும் மாறுபட்ட பயணத்தை மேற்கொள்கிறார். தமிழ்ப் புனைவுப் பரப்பில் புதிய கதவுகளை இதன்மூலம் திறக்கிறார்.
0
out of 5